ஆஸாத் சாலியின் வாகனத்தில் வெளிநாட்டுத் துப்பாக்கி; மூன்று சட்டங்களின் கீழ் குற்றம் புரிந்துள்ளார்: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

🕔 March 17, 2021

முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலியின் காரில் வெளிநாட்டு பிஸ்டல் ரக துப்பாக்கியும், தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஆசாத் சாலியை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர். இதன்போதே அவரின் வாகனத்தினுள் மேற்படி ஆயுதம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அண்மையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, நாட்டுச் சட்டம் தொடர்பில் ஆசாத் சாலி தெரிவித்த கருத்து தொடர்பில் அவரிடம் விசாரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி 1978 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், இலங்கை தண்டனைச் சட்டம் மற்றும் 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க ஐ.சி.சி.பி.ஆர் சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றம் புரிந்துள்ளமையினால், சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்