மருதமுனை பளீல் மௌலானாவின் 08ஆவது நினைவு நிகழ்வு

🕔 February 25, 2021

ஏ.எல்.எம். ஷினாஸ், றாசிக் நபாயிஸ்

தென்கிழக்கு பிரதேசத்தின் மூத்த கல்வி அதிகாரிகளில் ஒருவரான மருதமுனையை சேர்ந்த மர்ஹூம் ஐ. எம். எஸ்.எம். பளீல் மௌலானாவின் 8வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நினைவு தின நிகழ்வும் பாடசாலைக்கு அன்பளிப்பு வழங்குதலும் இன்று வியாழக்கிழமை மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

மருதமுனை பளீல் மௌலான பவுண்டேஷன் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

பாடசாலையின் அதிபர் ஏ. எல். சக்காப் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பளீல் மௌலானா கல்வித் துறைக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்து சிரேஷ்ட மெய்யியல் துறை விரிவுரையாளர் ஏ.ஜே.எம் வஸீல் விசேட உரையை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர் எம். எம். ஹிர்பகான், பளீல் மௌலானா பவுண்டேஷனின் தவிசாளரும் விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் எப்.எம் அஹமது அன்சார் மெளலானா, பிரதித் தலைவரும் விரிவுரையாளருமான அல் – இஹ்சான் ஹசன் மெளலானா, செயலாளர் இம்திஸா ஹசன்,  பொருளாளர் எம். எல்.எம். ஜமால்தீன் உட்பட பளீல் மௌலனாவின் குடும்பத்தினர், ஆசரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்