பேராசிரியர் றமீஸ் அபூபக்கருக்கு பல்கலைக்கழக சமூகம் பாராட்டு

🕔 February 24, 2021

– நூறுல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸிம் –

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவராக இருந்து கலை,கலாச்சார பீடத்தின் பீடாதிபதியாகவும், பேராசிரியராகவும் உயர்ந்து நிற்கும் கலாநிதி றமீஸ் அபூபக்கரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை கலை, கலாச்சார பீட அரங்கில் நடைபெற்றது.

பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான துறை தலைவர் கலாநிதி எம்.எம். பாஸில் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் கலந்து கொண்டார்.

இதன்போது தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கரை பற்றிய சிறப்புரையை தமிழ்த்துறை தலைவர் – தலைமைப் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் நிகழ்த்தினார்.

நிகழ்வில் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பொன்னாடை போற்றி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள பதினோரு பேரில் பேராசிரியர் றமீஸ் அபூபக்கரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்படி பாராட்டு நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் பதிவாளர், பிரதிப்பதிவாளர்கள், பீடாதிபதிகள், துறைத்தலைவர்கள், நிதியாளர், நூலகர், விரிவுரையாளர்கள் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்