அமைச்சர் பவித்ரா, வைத்தியசாலையில் இருந்து தாதியொருவருடன் வீடு சென்றாரா: செய்தி பொய் என்கிறது ஊடகப் பிரிவு

🕔 February 1, 2021

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தொடர்பாக, சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட போலி செய்திகளுக்கு எதிராகசட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சுகாதார அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்புக்குள்ளான நிலையில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி – தொற்று நோயியல் பிரிவு (ஐடிஎச்) வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் வைத்தியசாலையில் மோசமான குறைபாடுகள் இருப்பதாகத் தெரிவித்து, அமைச்சர் வீடு திரும்பினார் என, சமூக ஊடகங்களில் போலி செய்திகள் பரப்பப்படுவதாக சுகாதார அமைச்சரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

தொற்று நோயியல் பிரிவு வைத்தியசாலையில் வசதிகள் குறைவாக இருப்பதாகக் கூறி, ‘வென்டிலேட்டர்’ ஒன்றுடன் தாதியொருவரையும் அழைத்துக்கொண்டு அமைச்சர் தனது வீட்டிற்குச் சென்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆயினும் தொற்று நோயியல் பிரிவு வைத்தியசாலையில் அமைச்சர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் போலி செய்திகள் பரப்பப்படுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குகு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சரின் ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்