பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி குறித்து, கல்வியமைச்சர் அறிவிப்பு

🕔 December 21, 2020

நாட்டிலுள்ள பாடசாலைகளில் தரம் 01 தொடக்கம் 05 வரையிலான வகுப்புகளையும், முன்பள்ளி பாடசாலைகளையும் ஜனவரி மாதம் 11ஆம் திகதி தொடக்கம் மீண்டும் திறப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

இது குறித்து கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளார்.

இருந்தபோதும் மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களிலுள்ள பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை திறக்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஆரம்ப வகுப்புகள் தொடங்கும் போது இறுக்கமான சுகாதார கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்