க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மார்ச் மாதம்: கல்வியமைச்சர் தெரிவிப்பு

🕔 December 3, 2020

.பொ.த. சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் மார்ச் மாதமளவில் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் ஏற்பட்டமையினால், திட்டமிடப்பட்ட திகதியில் சாதாரண தர பரீட்சையை நடத்துவதற்கு முடியாது என ஏற்கனவே கல்வி அமைச்சர் அறிவித்திருந்தார்.

எனினும் பரீட்சைக்கான புதிய திகதியை 06 வாரங்களுக்கு முன்னர் அறிவிப்பதாகவும் கல்வி அமைச்சர் கூறியிருந்தார்.

இந்நிலையில் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் 2020ஆம் கல்வி ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சையை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும், திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்