பல்கலைக்கழகங்களுக்கு இம்முறை சேர்த்துக் கொள்ளப்படவுள்ள மாணவர்களின் தொகை பற்றிய தகவல் வெளியீடு

🕔 October 31, 2020

ல்கலைக்கழகங்களுக்கு இம்முறை 41,500 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவிருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் இருந்து இவர்கள் தெரிவு செய்யப்பட இருப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் அமரதுங்க தெரிவித்தார்.

கடந்த வருடத்திலும் பார்க்க பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்கள் எண்ணிக்கை 10000 இனால் அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் பேராசிரியர் கூறினார்.

இதற்கமைவாக மருத்துவ பீடத்திற்கு 371 பேரும், பொறியியல் பீடத்திற்கு 405 பேருமாக மேலதிக மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்