கொரோனா; இன்றும் ஒருவர் பலி: மரண எண்ணிக்கை 17ஐ எட்டியது
கொரோனா தொற்று காரணமாக நாட்டில் இன்றைய தினமும் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
கோரோனா காரணமாக நாட்டில் பலியான 17ஆவது நபர் இவர் என, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு மரணமடைந்தவர் ஜா – எல பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஆண் ஒருவராவார்.
இவர் ஈரல் நோயினால் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய தினமும் கொரோனாவினால் 70 வயதுடைய நபர் ஒருவர் மரணமானார்.