வீதிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள கல், மண்ணை அகற்றுமாறு அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் உத்தரவு

🕔 October 22, 2020

ட்டாளைச்சேனை பிரதேச சபையின் கீழ் வரும் பாதைகளில் கல் மற்றும் மண் போன்றவற்றினை குவித்து வைத்திருப்போர் அவற்றினை அகற்றுமாறு, அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா உத்தரவிட்டுள்ளார்.

பொதுமக்களின் போக்குவரத்துக்குத் தடையாக, நிர்மாண வேலைகளுக்குத் தேவையான கல் மற்றும் மண் ஆகியவற்றினை சிலர் தமது வீடுகளுக்கு முன்பாகவுள்ள பாதைகளில் குவித்துள்ளமையினைக் காணக் கூடியதாகவுள்ளது.

எனவே எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர், இவ்வாறு பாதையில் குவிக்கப்பட்டுள்ள கல்,மண் மற்றும் இதர பொருட்களை உடன் அகற்றுமாறு உரியவர்களைக் கேள்டுக் கொள்வதாகவும் தவிசாளர் தெரிவித்துள்ளார்.

இல்லாவிடத்து, 2020 / 10 / 28 ஆம் திகதி தொடக்கம் வீதிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள இவ்வாறானவை அனைத்தும் பிரதேச சபையால் அகற்றப்பட்டு, அவை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தவிசாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்