துப்பாக்கிகளுடன் அலிக்கம்பையில் கைதான முன்னாள் புலி உறுப்பினருக்கு விளக்க மறியல்

🕔 October 17, 2020

ரண்டு துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் உள்ளிட்ட இரு சந்தேக நபர்களை, எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் – அலிக்கம்பை பிரதேசத்தில் சில தினங்களுக்கு முன்னர் இரண்டு துப்பாக்கிகளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

முத்துலிங்கம் அந்தோனி மற்றும் சாமித்தம்பி பிரதீப் எனும் பெயருடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் முத்துலிங்கம் அந்தோனி என்பவர், புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் என, அக்கரைப்பற்று போலீசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர் விடுதலைப் புலிகள் அமைப்பின் ராதா படைப்பிரிவில் 10 ஆண்டுகளாக செயற்பட்டு வந்தவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளையும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் போலீசார் முன்னிலைப்படுத்திய போது, எதிர்வரும் 28ஆம் திகதி வரை சந்தேக நபர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்