களனி பல்கலைக்கழக உபவேந்தராக பெண் பேராசிரியர் ஒருவர் நியமனம்

🕔 August 28, 2020

ளனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் நிலந்தி ரேணுகா டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை வரலாற்றில் பல்கலைக்கழக உபவேந்தராக பெண்கள் நியமிக்கப்படுகின்றமை மிகவும் அரிதான நிலையில், இவரின் நியமனம் இடம்பெற்றுள்ளது.

பேராசிரியர் நிலந்தி ரேணுகா டி சில்வா இன்றைய தினம் தனக்கான கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்