ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்க தயார்: விருப்பத்தை வெளியிட்டார் கரு ஜயசூரிய

🕔 August 24, 2020

க்கிய தேசிய கட்சிக்கு தலைமைத்துவத்தை வழங்கும் சவாலை ஏற்க தான் தயாராக உள்ளதாக என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

கட்சியின் தற்போதைய தலைமைக்கு இது தொடர்பில் அறிவித்துள்ளதாக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலையில் கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பநிலையினை கருத்திற் கொண்டு, பல்வேறு தரப்பினர்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக கட்சியின் மேம்பாட்டிற்காக ஐக்கிய தேசிய கட்சிக்கு தலைமைத்துவத்தை வழங்கும் சவாலை பொறுப்பேற்க தன்னால் முடியும் என தற்போதைய கட்சித் தலைமைக்கு மற்றும் கடசியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பெரிய கட்சியாகவும் பழைமை வாய்ந்த கட்சியாகவும் ஆளுங்கட்சியாகவும் திகழ்ந்த ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக, இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் எவரும் வெற்றி பெறாத நிலையில், கரு இந்த விருப்பத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்