ஆட்கடத்தல் குற்றச்சாட்டு; வாக்குமூலம் வழங்க பின்னடித்து வரும் ரத்ன தேரர் கைதாகலாம்

🕔 August 24, 2020

ங்கள் மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் வெதினிகம விமலதிஸ்ஸ தேரரை கடத்தியதாக, அத்துரலியே ரதன தேரருக்கு எதிராக செய்யப்பட்டுள்ள பொலிஸ் முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்கு, ரத்ன தேரர் பின்னடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலை நீடித்தால், ரத்ன தேரரைக் கைது செய்ய நேரிடும் என பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என, ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரத்ன தேரருக்கு எதிராக செய்யப்பட்டுள்ள ஆட்கடத்தல் தொடர்பான முறைப்பாட்டுக்கு அமைய வாக்குமூலம் வழங்க வேண்டும் எனவும், ரதன தேரர் அதனை தவிர்த்து வருவதாகவும், இது ஆட்கடத்தல் குற்றச்சாட்டு குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழ் வரும் குற்றம் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

இதனால், அத்துரலியே ரதன தேரர் விரைவில் கைது செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிப்பதாக, அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்