223 உறுப்பினர்களுடன் நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நாளை ஆரம்பம்

🕔 August 19, 2020
பிரேமலால் ஜயசேகர மற்றும் பிள்ளையான்

புதிய நாடாளுமன்ற அமர்வு 223 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நாளை ஆரம்பமாகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டிலுக்கான நாடாளுமன்ற உறுப்பினரின் பெயர் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதேவேளை, ‘எங்கள் மக்கள் சக்தி கட்சி’யின் நாடாளுமன்ற உறுப்பினர் பெயரை அறிவிப்பதில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக 223 உறுப்பினர்களுடனேயே நாளை நாடாளுமன்றம் கூடுகிறது.

அதேவேளை, கொலைக் குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகர மற்றும் கொலைக் குற்றம் தொடர்பில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோரும் நாளைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்