05 வருடங்களில் 557 தடவை பறந்த மைத்திரி; உலகை 03 தடவை சுற்றும் தூரம் பயணித்துள்ளார்

🕔 July 7, 2020

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது ஐந்து வருட ஆட்சிக் காலத்தில் இலங்கை விமானப் படைக்குத் சொந்தமான ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்டதி ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 277 கிலோமீற்றர் தூரம் பயணித்துள்ளார்.

அந்த வகையில் வருடமொன்றுக்கு சராசரியாக 111 தடவை, ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்டதியுள்ள மைத்திரி, 70 ஆயிரத்து 884 கடல் மைல் தூரம், அதாவது 01 லட்சத்து 81 ஆயிரத்து 277.17 கிலோமீற்றர் பயணம் செய்துள்ளார்.

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக, இலங்கை விமானப் படை தலைமையகத்திலிருந்து தமிழ் மிரர் பத்திரிகை பெற்றுக் கொண்ட தகவல்களிலேயே மேற்படி விடயம் அம்பலமாகியுள்ளது.

இலங்கை விமாப் படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்களை 557 தடவை இவர் தனது பயணத்துக்காகப் பயன்படுத்தியுள்ளார்.

அந்த வகையில் சராசரியாக வருடமொன்றுக்கு 111 தடவை ஹெலிகொப்டர்களை மைத்திரி பயன்படுத்தியுள்ளார்.

ஐந்து வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த 557 பயணங்களுக்கும் எதுவித கட்டணங்களும் விமானப் படைக்குச் செலுத்தப்படவில்லை.

மைத்திரியின் மேற்படி பயண தூரங்களின் படி, அவர் உலகை மூன்று தடவை சுற்றி வந்திருக்க முடியும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்