இளைஞரை கடத்திச் சென்று தாக்கிய வழக்கு: ஹிருணிகாவுக்கு அழைப்பாணை விடுக்க, நீதிமன்றம் உத்தரவு

🕔 June 17, 2020

ளைஞன் ஒருவரை கடத்திச் சென்று தாக்கிய சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள வழக்கின் பொருட்டு, முன்னாள் நாடாளுமன்ற ஹிருணிகா பிரேமசந்திரவை ஜூலை மாதம் 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன இந்த உத்தரவை விடுத்துள்ளார்.

தெமட்டகொடையில் வைத்து இளைஞர் ஒருவரை கடத்தி, தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டுடன் தொடர்புபட்டார் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர 2016ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பில் ஹிருணிகா மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்