என்னை பயங்கரவாதி என ‘பேஸ்புக்’ நிறுவனத்துக்கு கடந்த அரசாங்கம் அறிவித்திருந்தது: ஞானசார தேரர்

🕔 June 15, 2020

ன்னை பயங்கரவாதி என பேஸ்புக் நிறுவனத்திற்கு கடந்த அரசாங்கம் அறிவித்திருந்ததாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக பேஸ்புக் நிறுவனம் தனது புகைப்படம் மற்றும் பெயருக்கும் தடைவிதித்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ஈஸ்டர் தின குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்து விட்டு, செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கையில் உள்ள இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பாக பல சந்தர்ப்பங்களில் தகவல்களை வெளியிட்ட போதிலும் அது குறித்து அன்றைய பாதுகாப்புச் செயலாளரும், இன்றைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷ மாத்திரமே கவனம் செலுத்தியிருந்தார்.

அவர் தற்போது நாட்டின் ஜனாதிபதி என்பதால், இஸ்லாமிய அடிப்படைவாதத்தை அடக்குவதற்கு சாதகமான நடவடிக்கைகளை எடுப்பார் என நம்ப முடியும்” எனவும் ஞானசார தேரர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்