அதிக கொரோனா தொற்றாளர்கள் நாட்டில் இன்று அடையாளம் காணப்பட்டனர்

🕔 May 26, 2020

நாட்டில் இன்றைய தினம் (மாலை 06 மணிவரை) 96 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

ஒரே தினத்தில் அதிகளவான கோரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டமை இதுவே முதன்முறையாகும்.

இதனால் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,278 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை 712 பேர் கொரோனா தொற்றிலிருந்து சுகமடைந்துள்ளனர்.

உலகளவில் 55 லட்சத்து 91,970 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 23 லட்சத்து 68,120 பேர் குணடைந்துள்ளனர்.

உலகில் 3 லட்சத்து 47,950 பேர் கொரோனாவினால் மரணமடைந்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்