கொரோ தொற்று காரணமாக பெண்ணொருவர் உயிரிழப்பு

🕔 May 25, 2020

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குவைத்தில் இருந்த அழைத்து வரப்பட்டிருந்த நிலையில், திருகோணமலை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 51 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

குவைத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட சிலர் – திருகோணமலை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிணங்க, நாட்டில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 என சுகாதார மேம்பாட்டுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

07 ஆண்களும் 03 பெண்களும் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்னர்.

ஆயினும், 09ஆவதாக உயிரிழந்ததாகக் கூறப்படும் பெண் – கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கவில்லை என, அரச மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் சங்கத் தலைவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்