வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொண்டமை செல்லுபடியாகுமா; எழுந்துள்ள புதிய சர்ச்சை: சட்ட மா அதிபரிடம் ஆலோசனை

🕔 May 3, 2020

பொது விடுமுறை தினங்களில் வேட்பு மனுக்களை ஏற்றுக் கொண்டமை சட்டரீதியாக செல்லுபடியாகுமா என, சட்ட மா அதிபரிடம் தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசனை கோரியுள்ளது.

பொது விடுமுறை காலத்திலேயே வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டடிருந்தது. இவ்வாறு செய்ய முடியுமா என்பது குறித்து எழுந்த கேள்விகளைத் தொடர்ந்து, தேர்தல் ஆணைக்குழு இவ்வாறு ஆலோசனை கோரியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுகை பரவுவதனை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் 17, 18 மற்றும் 19ம் திகதிகளை அரசாங்கம் பொது விடுமுறைக் காலமாக வர்த்தமானி ஊடாக அறிவித்திருந்தது.

இந்த பின்னணியில் இவ்வாறான ஒரு நிலைமை கடந்த காலங்களில் ஏற்பட்டதில்லை என்ற காரணத்தினால், சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் இது குறித்து ஆலோசனை பெற்றுக்கொள்ள தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்து ஆலோசனை கோரியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்