நாடாளுமன்றத் தேர்தல் ஜுன் 20ஆம் திகதி: தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது

🕔 April 20, 2020

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான மீள் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கிணங்க, ஜுன் மாதம் 20ஆம் திகதி சனிக்கிழமை நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படவுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும்.

இம்மாதம் 25ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஏற்கனவே நாள் குறிக்கப்பட்டிருந்தது.

கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, தேர்தலை ஒத்தி வைக்க வேண்டி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: நாடாளுமன்றத் தேர்தல்; மாற்றுத் திகதியை தீர்மானிக்கும் அதிகாரம், ஆணைக்குழுவுக்கே உள்ளது: மஹிந்த தேசப்பிரிய

Comments

புதிது பேஸ்புக் பக்கம்