உயர்தரப் பரீட்சை ஒத்தி வைக்கப்படவில்லை; சாதாரண தர பரீட்சை முடிவுகள் ஏப்ரல் வெளியாகும்
2019 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி பொதுதராதர பத்திர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சு இது தொடர்பில் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.
அத்துடன் 2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்படவுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் அந்த அறிக்கையில் கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சை வழமைபோன்று எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது