கொரோனா தாக்கம்: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59ஆக உயர்வு
கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதா மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் (19ஆம் திகதி) புதிதாக 07 பேர், கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இலங்கையைப் பொறுத்தவரை கொரோ வைரஸ் தாக்கம் ஒப்பீட்டு ரீதியில் அதிகமானதாக உள்ளது.
138 கோடிக்கும் அதிகமான சனத்தொகையைக் கொண்ட இந்தியாவில் 168 பேர் மட்டுமே, இதுவரை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், சுமார் 02 கோடி 15 லட்சம் வரையிலான சனத்தொகை கொண்ட இலங்கையில், 59 பேர் இதுவரையில் கொரோனா வைரஸனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, உலகளவில் 219,243 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளர்.
இதுவரையில் இந்தத் தொற்று காரணமாக 8,967 மரணங்கள் சம்பவித்துள்ளன.