பிடியாணையை ரத்துச் செய்யுமாறு கோரி, ரவி தாக்கல் செய்த ரிட் மனுவை, நாளை எடுத்துக் கொள்ள தீர்மானம்

🕔 March 10, 2020

ன்னை கைது செய்யுமாறு தெரிவித்து கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை ரத்து செய்யுமாறு முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தாக்கல் செய்த ரிட் மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

மத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அர்ஜூன் மகேந்திரன், அர்ஜூன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோரை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் கடந்த 06 திகதி பிடியாணை பிறப்பித்தது.

குறித்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள விதம் சட்டத்திற்கு முரணானது ரவி கருணாநாயக்க தனது ரிட் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தன்னை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் அனுப்பி வைத்த அறிவுறுத்தலையும் ரத்து செய்யுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் குறித்த வழக்கை கொழும்பு கோட்டை நீதவானிடம் இருந்து நீக்குவதற்காக உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறும் அவர் அந்த மனுவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறித்த ரிட் மனுவின் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், ரகசிய பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.


Comments

புதிது பேஸ்புக் பக்கம்