சுதந்திர தினத்தையொட்டி 512 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு

🕔 February 4, 2020

நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, 512 சிறு குற்றக் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாபதி இந்த மன்னிப்பை வழங்கியுள்ளார்.

அரசமமைப்பின் 34 வது பிரிவுக்கு அமைவாகவும் நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்த அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வா அவர்களின் பரிந்துரையின் படியும், ஜனாதிபதிக்கு உரித்தான அதிகாரங்களுக்கு உட்பட்டும் இந்த பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விடுவிக்கப்படுகின்றவர்கள் – திருட்டு, நம்பிக்கை மீறல் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் போன்ற சிறிய குற்றங்களுக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வந்தவர்களாவர்.

பாலியல் வன்முறை, கொள்ளை, கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் லஞ்சம் பெறல் போன்ற பெருங் குற்றங்களுக்காகத் தண்டனை பெற்றவர்கள் யாரும் இந்த விடுவிக்கப்படுவோர் பட்டியலில் இடம்பெறவில்லை என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்