ரணில் பதவி விலகவுள்ளார்: அஜித் பி. பெரேரா

🕔 December 3, 2019

க்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது பொறுப்புக்களை நிறைவு செய்து பதவி விலக தயாராக உள்ளார் என அறியக்கிடைத்துள்ளது” என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர் இதனைக் கூறினார்.

ரணில் விக்ரமசிங்க மிகவும் கௌரவமான முறையில் புதிய தலைமுறைக்கு தமது பொறுப்புக்களை ஒப்படைத்து அவரின் ஜனநாயக கடமையை நிறைவு செய்வார் என தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்