கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளராக, டொக்டர் சுகுணன் நியமனம்

🕔 October 11, 2019

– றிசாத் ஏ காதர் –

ல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளராக டொக்டர் ஜீ. சுகுனன் நியமிகக்கப்பட்டுள்ளார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதிப் பணிப்பாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

கடந்த ஆறுமாதங்களாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றிய இவர், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகராகவும் கடமையாற்றியிருந்தார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய டொக்டர் ஏ.எல். அலாவுத்தீன், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளராக பதவியுயர்வு பெற்றுச் சென்றமையினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே, டொக்டர் ஜீ. சுகுனன் பதில் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்