ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டத்துக்கான அமைப்பாளர்கள் நியமனம்

🕔 April 10, 2019

– முன்ஸிப் –

க்கிய சமாதானக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டத்திலுள்ள மேலும் சில பிரதேசங்களுக்கு நேற்று செவ்வாய்கிமை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

கட்சியின் தவிசாளர் பஷீர் சேகு­தாவூத் மற்றும் செயலாளர் எம்.ரி. ஹசன் அலி ஆகியோர், மேற்படி அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தனர்.

இந்த நிகழ்வு கட்சியின் செயலாளர் ஹசன் அலியின் நிந்தவூர் இல்லத்தில் நடைபெற்றது.

இதன்போது சம்மாந்துறை அமைப்பாளராக எம்.எல். நாஸர், இளைஞர் அமைப்பாளராக ஏ.பி.எம். சியாம், நாவிதன்வெளி இளைஞர் அமைப்பாளராக மெளலவி ஏ.பி.கால்தீன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் இர்பான் முகைதீன், உயர்பீட உறுப்பினர்கள் ஏ.எம். அவூபர், கே.எல். சமீம் உள்ளிட்டோரும் சமூகமளித்திருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்