இலங்கைக் கடலில் 100 கிலோ ஹேரோயினுடன் ஈரானியர்கள் கைது

🕔 March 24, 2019

லங்கையின் தென் கடற்பகுதியல் மீன்பிடிப் படகொன்றில் போதைப் பொருட்களுடன் பயணித்த 09 ஈரான் நாட்டவர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 100 கிலோ கிராமுக்கு அதிகமான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக, விசேட அதிரடிப்படையின் கட்டளையிடும் அதிகாரி சிரேஷ்ட ​பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர். லத்தீப் தெரிவித்துள்ளார்.

குறித்த படகு சுற்றிவளைக்கப்பட்ட போது, கப்பலிலிருந்து   500 கிலோகிராமுக்கும் அதிகமாக போதைப் பொருள்  கடலுக்குள் கொட்டப்பட்டிருக்கலாம் என்றும் லத்தீன் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானிலிருந்தே இந்த போதைப் பொருள், நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதென்றும், சிரேஷ்ட ​பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர் லத்தீப் தெரிவித்துள்ளார்.

விசேட அதிரடிப்படையின் இந்த நடவடிக்கைக்கு, கடற்படையினரும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்