கிழக்கின் ஐந்து துறைகளுக்கான தலைவர்களும், பணிப்பாளர்களும் நியமனம்

🕔 January 31, 2019
 கிழக்கு மாகாணத்தின் ஐந்து துறைகளுக்கான தலைவர்களும் பணிப்பாளர்சபை  உறுப்பினர்களும் இன்று வியாழக்கிழமை நியமிக்கப்பட்டனர்.

கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் மேற்படி நியமனங்களை வழங்கினார்.

கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ்.எம்.பி. அசங்க அபயவர்தன தலைமையில், திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இந்த நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.

இதன்போது மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் தங்கமுத்து ஜெயசிங்கம், கிழக்கு மாகாண போக்கு வரத்து அதிகார சபையினுடைய தலைவராக ஜீ. கரீதரன், கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தின் தலைவராக எம்.எஸ். உதுமா லெவ்வை, கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக எம்.எஸ். சுபைர், கிழக்கு மாகாண உல்லாச பயணத்துறையின் தலைவராக இந்திக நளீன் ஜெயவிக்ரம ஆகியோரும் இத்துறைகளுக்கான  பணிப்பாளர் சபை உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்