ஜனாதிபதியின் அழைப்பை சபாநாயகர், ஜே.பி.வி. நிராகரிப்பு

🕔 November 18, 2018

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளையும், சபாநாயகரையும் இன்று சந்திப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைத்திருந்த நிலையில், இந்த சந்திப்பில் – தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மக்கள் விடுதல முன்னணியும் (ஜே.வி.பி) மேற்படி சந்திப்பில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் இழுபறிக்கு தீர்வு காணும் பொருட்டு, அனைத்துக் கட்சிகளையும் இன்று மாலை 5.00 மணிக்கு சந்திப்பதற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார்.

ஜனதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்