எரிபொருள்களுக்கான விலைகள் அதிகரிப்பு
எரிபொருள்களின் விலைகளை நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளதாக, நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிணங்க 92 ஒக்டைன் பெற்றோலின் விலை 08 ரூபாவினாலும், 95 ஒக்டைன் பெற்றோலின் விலை 07 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, டீசல் விலை 09 ரூபாவாலும், சுப்பர் டீசர் 10 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் புதிய விலைகள் வருமாறு;
92 ஒக்டைன் பெற்றோல் – 145 ரூபாய்
95 ஒக்டைன் பெற்றோல் – 155 ரூபாய்
டீசல் – 118 ரூபாய்
சுப்பர் டீசல் – 129 ரூபாய்