அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டா களமிறங்குவாரா: பதிலளித்தார் மஹிந்த

🕔 June 10, 2018

கோட்டாபய ராஜபக்ஷவை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என, பொதுமக்கள் விடுக்கும் வேண்டுகோள்களை கருத்தில் எடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போது, அவர் இதனை கூறினார்.

ஜனாதிபதியாகுவதற்கு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எவ்வளவு ஆதரவு தேவை என்பது குறித்து தனக்கு தெரியும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

பொதுமக்கள் மத்தியில் கோட்டா தொடர்பாக காணப்படும் அபிப்பிராயத்தைக் கணக்கில் எடுத்துள்ளதாகவும், தனக்கும் தனது சகோதரருக்கும் இடையில் எந்தவித கருத்து முரண்பாடுகளும் இல்லை எனவும் இதன்போது மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார்.

“எங்கள் இருவர் மத்தியில் அதிகாரப் போட்டியெதுவும் இல்லை. முன்னர் குடும்ப ஆட்சி குறித்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்கள்தான், எனக்கும் கோட்டாவுக்கும் இடையில் முரண்பாடுகள் உள்ளதாக தற்போது கதை பரப்புகின்றனர்” என்றும், மஹிந்த கூறினார்.

“பொது எதிரணியில் வெறுமனே ராஜபக்ஷக்கள் மாத்திரம் இல்லை. அரசாங்கத்தில் இல்லாத சிறந்த அரசியல்வாதிகளும் எம்முடன் உள்ளனர்” என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்