பாலமுனை கூட்டத்தில் ஹக்கீம் கலந்து கொண்டிருக்கும் தருணத்தில் மின்தடை; கல்வீச்சு இடம்பெற்றதாகவும் தகவல்

🕔 January 14, 2018

– முன்ஸிப் அஹமட் –

பாலமுனையில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், பிரசாரக் கூட்டமொன்றில்  கலந்து கொண்டிருக்கும் நிலையில், அங்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

இதன்போது மேடையை நோக்கி சரமாரியாக கல்வீசப்பட்டதாகவும் அறிய முடிகிறது.

இதனால், பிரசார மேடை – சில நிமிடங்கள் ஸ்தம்பிதமானது.

எவ்வாறாயினும், தற்போது மின் பிறப்பாக்கியின் உதவியுடன் வெளிச்சம் ஏற்படுத்தப்பட்டு பிரசாரக் கூட்டம் தொடர்கிறது.

இந்த நிலையில், தற்போது பொலிஸார் தமது பாதுகாப்பினை மேலும் பலப்படுத்தியுள்ளதோடு, கூட்டத்துக்குச் செல்பவர்களை சோதனைக்கு உட்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் அங்கு – மோதல் சம்பவமொன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்