மூன்று மாதங்களில் அமைச்சுப் பதவி வழங்கப்படும்; வாக்குறுதி பெற்ற பிறகுதான், ரவி ராஜிநாமா செய்தார்

🕔 August 10, 2017

மூன்று மாதங்களில் அமைச்சு பதவியை வழங்கப்படும் என்கிற வாக்குறுதியைப் பெற்றுக் கொண்ட பின்னர்தான், ரவி கருணாநாயக்க தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக தெரிவித்தார்.

ரவி கருணாநாயக்கவின் ராஜினாமா தொடர்பில் இன்று வியாழக்கியழமை மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துவெளியிடும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“இன்னும் மூன்று மாதங்களில் அமைச்சு பதவி வழங்குவதாக வாக்குறுதி வழங்கப்பட்ட பின்னர்தான், ரவி தனதுபதவியை ராஜினாமா செய்துள்ளார்.

முன்னதாக திலக் மாரப்பன பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் பின் வாசலால் வந்து அவர் மீண்டும் அமைச்சைப்பெற்றார்.

தற்போது ரவி ராஜினாமா செய்துள்ளார். அடுத்து, ராஜினாமா செய்யும் அமைச்சை ரவி பொறுப்பேற்பார். இதுதான் இவர்களின் நல்லாட்சியாகும்.

எல்லாம் நாடகம். இவர்களை இனிமேலும் நம்புவதற்கு, மக்கள் முட்டாள்கள் இல்லை” என்றார்.

(ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்