தூக்கத்தினால் வந்த வினை; மின்சாரக் கம்பத்தில் கார் மோதி, நால்வர் படுகாயம்

🕔 July 31, 2017

– க. கிஷாந்தன் –

தி வாய்ந்த மின்சார கம்பத்துடன் கார் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளானதில், நான்கு பேர் படுங்காயமடைந்து கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி, கினிகத்தேன பதுபொல எனும் இடத்தில், இன்று காலை இவ் விபத்து இடம்பெற்றது.

கட்டுநாயக்கவிலிருந்து கினிகத்தேன அலகல பகுதியை நோக்கி, குறித்த கார் செல்லும் வழியிலேயே வீதியை விட்டும் விலகி விபத்துக்குள்ளாகியது.

சாரதிக்கு உறக்கம் ஏற்பட்டதன் காரணமாக இவ்விபத்து  நேர்ந்திருக்கலாம் என்று, விசாரணைகளை மேற்கொள்ளும் கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.

காரில் பயணித்த 50 வயது மதிக்கதக்க பெண் ஒருவரும், மூன்று இளைஞர்களும் படுங்காயங்களுக்கு உள்ளாகினர்.

அதிசக்தி வாய்ந்த மின்சார தூணுடன் மேற்படி கார் மோதுண்டதனால், மின்சார கம்பம் சேதத்துக்குள்ளானது. இதனால் அப்பிரதேசத்திற்கு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும், அதனை சீர் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கினிகத்தேன பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்