வேண்டாம் நன்றி: முகத்தில் அடித்தால் போல், மஹிந்தவுக்கு பதில் சொன்னார் மங்கள

🕔 July 31, 2017

ரசாங்கத்துக்கு உங்களின் உதவிகள் எவையும் தேவையில்லை என்று, மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.

நாட்டுக்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட எவருடனும் பேசுவதற்கு, தான் தயார் என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமைக்கு பதிலளிக்கும் வகையிலேயே, மேற்கண்டவாறு மங்கள தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ ட்விட்டர் ஊடாக மக்களின் கேள்விகளுக்கு அண்மையில் பதிலளித்துக் கொண்டிருந்தார். இதன்போது, மஹிந்த வெளியிட்ட கருத்து ஒன்றுக்கு பதிலளிக்கும் வகையிலேயே, மேற்கண்ட பதிலை மங்கள சமரவீர கூறியுள்ளார்.

மங்கள தனது ட்விட்டரில் தெரிவிக்கையில்;

‘வேண்டாம், நன்றி. நாட்டை எப்படி ஆள்வது என்பது தொடர்பாக, உங்களின் ஆலோசனை, நிச்சயமாக வேண்டாம். நாங்கள் துப்பரவு செய்வதற்காக, நீங்கள் விட்டுச் சென்றுள்ள குப்பையைப் பாருங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்