ஜப்பானுக்கு மஹிந்த விஜயம்; மகன் யோசிதவும் உடன் செல்கிறார்

🕔 June 1, 2017

ப்பானுக்கான விஜயமொன்றினை மேற்கொள்ளும் பொருட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்று புதன்கிழமையிரவு இலங்கையிலிருந்து புறப்பட்டார்.

ஜப்பான் நாட்டு பேரரசரின் அழைப்புக்கிணங்க, மஹிந்த ராஜபக்ஷ இந்த விஜயத்தினை மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒன்பது பேர் கொண்ட குழுவினர் இந்த விஜயத்தில் அடங்குகின்றனர்.

மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித ராஜபக்ஷ மற்றும் லொஹான் ரத்வத்த ஆகியோரும் இந்த பயணத்தில் இணைந்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்