இலங்கையரிடம் வெடிகுண்டு; பறந்து கொண்டிருந்த விமானம் அவசரமாகத் தரையிரக்கம்

🕔 June 1, 2017
காயத்தில் பறந்து கொண்டிருந்த விமானமொன்றில் இலங்கையர் ஒருவர் அடித்த கூத்துக் காரணமாக, குறித்த விமானம் அவசரமாகத் தரையிரக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது.

அவுஸ்ரேலியாவின் மெல்போர்ன் நகரிலிருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்குப்  புறப்பட்ட விமானத்தில், குறித்த இலங்கைப் பயணி நடந்து கொண்ட முறை காரணமாக, புறப்பட்ட சில நிமிடங்களிலே மீண்டும் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இது பற்றி மேலும் தெரிய வருவதாவது;

அவுஸ்ரேலியாவின் மெல்போர்ன் விமான நிலையத்திலிருந்து, கோலாலம்பூருக்கு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டது. அப்போது அந்த விமானத்தில் இலங்கையை சேர்ந்த பயணி ஒருவரிடம் வெடிகுண்டு இருப்பதாக தகவல் பரவியதைத் தொடர்ந்து, பயணிகள் பெரும் கலவரத்துக்குள்ளாகினர்.

இதனால் விமானம் மீண்டும் மெல்போர்ன் விமான நிலையத்தில் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. பின்னர் தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அதன் பின்னர், குறித்த  இலங்கையரிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆனால், அவரிடம் வெடிகுண்டுகள் எவையும் இருக்கவில்லை.

உண்மையிலேயே அந்த இலங்கைப் பயணி குடிபோதையில் விமான பணியாளர்களிடம் தகராறு செய்திருந்ததோடு, விமானிகள் அறைக்குள்ளும் புகுவதற்கு முயற்சி செய்திருக்கிறார் என்பது விசாரணைகளில் தெரிய வந்தது.

இதனையடுத்து, பயணிகளை தொந்தரவு செய்யும் வகையில் நடந்து கொண்ட அந்த நபரை அவுஸ்ரேலியப்பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்