அமைச்சர்கள், எம்.பி.களுக்கான வாகன கொள்வனவை இடை நிறுத்த, ஜனாதிபதி தீர்மானம்

🕔 May 30, 2017

மைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனக் கொள்வனவினை இடை நிறுத்துவதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினை கவனத்திற் கொண்டு இந்தத் தீர்மானத்தினை ஜனாதிபதி எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே, இந்தத் தீர்மானத்தினை ஜனாதிபதி வெளியிட்டார்.

இந்த வருட இறுதிவரை, மேற்படி வாகனக் கொள்வனவினை இடைநிறுத்துவதென இதன்போது தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிய வருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்