சஊதியிலிருந்து இந்தோனேசியா பறந்த விமானம், இலங்கையில் அவசரமாக தரையிறக்கம்
சஊதி அரேபியாவிலிருந்து இந்தோனேசியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் விமானமொன்று, பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில் அவசரமான தறையிறக்கப்பட்டது.
மேற்படி விமானத்தில் பயணித்த ஒருவருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டமையினாலேயே, விமானம் அவசரமாக தறையிறக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்நிலையில் சுகயீனமடைந்த நபர், நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதியளிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்த 75 வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுகிறது.