காற்றுடன் கூடிய காலநிலை மாற்றம் ஏற்படும்; அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை
நாடு முழுவதும் காற்றுடன் கூடிய காலநிலை மாற்றம் ஏற்படுமென, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் மூன்று நான்கு நாட்களுக்கு இந்த நிலைமை நீடிக்கும் எனவும் திணைக்களம் கூறியுள்ளது.
மணிக்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கடற்கரைப் பிரதேசத்தில் அதிக காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் இந்த நிலைமை குறித்து அவதானத்துடன் இருக்க வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்னரும், இவ்வாறான காலநிலை மாற்றம் ஏற்பட்டமை காரணமாக, அம்பாறை மாவட்டத்தில் மரங்கள் முறிந்து விழுந்ததால், சில அசம்பாவிதங்கள் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.