யாழ் பல்கலைக்கழக ஊடக கற்கை நெறியில், முதல் முஸ்லிம் மாணவராக பாறுக் ஷிஹான் சித்தி
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடகவியல் கற்கை நெறி பயிற்சியில், ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான் சித்தியடைந்துள்ளார்.
திங்கட்கிழமை வெளியிடப்பட்ட பரீட்சை முடிவின் படி, இவர் சித்தியடைந்துள்ளதாக அறியமுடிகிறது.
கடந்த 2010 ஆண்டு இக்கற்கை நெறியில் இணைந்துஇ சிறப்பாக முயற்சி செய்து இச்சித்தியை பெற்றுள்ளார்.
யாழ் பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி நிலையத்தில் – ஊடகவியல் கற்கை நெறியை பூர்த்தி செய்த முதல் முஸ்லிம் மாணவர் இவராவார். இவருடன் 12 மாணவர்கள் இக்கற்கை நெறியில் இணைந்து கற்ற போதிலும்இ இருவரே சித்தியடைந்துள்ளனர்.
ஏற்கனவே, யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தில் சிறப்புபட்ட கற்கைநெறியை இவர் பூர்த்தி செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது