விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா பயணமானார் கோட்டா

🕔 April 12, 2016

Gotabaya - 01பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ, அமெரிக்காவுக்கு திடீரென பயணமாகியுள்ளார். எதிர்வரும் 18ஆம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே கோட்டபாய அவசரமாக அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முப்படையினர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளடங்களாக 179 பேரை, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தியமை தொடர்பில், மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்காக வாக்குமூலம் ஒன்றினை பெற்றுகொள்ளும் பொருட்டு, ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு கோட்டா அழைக்கப்பட்டிருந்தார்.

அமைச்சர் ஒருவரின் பாதுகாப்புக்கு ராணுவத்தினரை ஈடுபடுத்துவது கடுமையான குற்றம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக பசில் ராஜபக்ஷவின் வீட்டினை சுத்தம் செய்வதற்காகவும், அரசாங்க பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

அமைச்சரின் அதிகாரத்தை மீறி அடிப்படையின்றி இவ்வாறு ராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தற்போதைய அரசியல் மோதல்களில் தலையிடாமல் அமைதியாக இருக்குமாறு, கோட்டபாய ராஜபக்ஷவின் ஆலோசகர்கள் அவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும், அதற்கமையவே சிறிது காலம் நாட்டை விட்டு அவர் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கோட்டபாயவின் மனைவியின் தாயாரின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளமையினால், கோட்டா அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்