பொலிஸ் பரிசோதகர் றஹ்மான் காலமானார்: நல்லடக்கம் மருதமுனையில்

🕔 December 5, 2018
– யூ கே. காலித்தீன் –

பொலிஸ் பரிசோதகரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான இஸட்.ஏ.எச். றஹ்மான் (வயது 54)  இன்று புதன்கிழமை காலமானார்.

அதிகாலை ஓரு மணியளவில்  திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் அவர் உயிரிழந்தார்.

மருதமுனையை சொந்த இடமாகக் கொண்ட இவர், நான்கு பிள்ளைகளின் தந்தையாவார்.

திருகோணமலை உப்புவெளி பிரதேசத்தில் பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றி வந்த நிலையிலேயெ இவர் மரணமானார்.

இவர் 1988ஆம் ஆண்டு உப பொலிஸ் பரிசோதகராக நியமனம் பெற்று, வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றினார்.

அரசியல் பழிவாங்கல் காரணமாக தொழிலில் இருந்து  நீக்கப்பட்ட இவர், 23 வருடங்களின் பின்னர் மீண்டும் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஜனாஸா நல்லடக்கம் மருதமுனையில் இடம்பெறும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்