ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார்; அமெரிக்க குடியுரிமையையும் துறப்பேன்: கோட்டா தெரிவிப்பு

🕔 April 11, 2018

டுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிடுவதற்கு தான் தயாராக உள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாப ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதற்­காக தனது அமெ­ரிக்க குடி­யு­ரி­மையைக் கைவி­டவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆங்­கில ஊடகம்  ஒன்­றுக்கு வழங்கியுள்ள செவ்­வி­யொன்றிலேயே அவர் இந்த தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.

குறித்த நேர்காணலின் முக்கிய பகுதிகள் வருமாறு;

கேள்வி: ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நீங்கள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ள­தாக பேசப்படுகிறது.  ஜனாதிபதி வேட்­பா­ள­ராகப் போட்­டி­யி ­டு­வது பற்றி யாரேனும் உங்களை அணு­கி­னார்­களா?

பதில்: இல்லை. ஆனால், பேசப்­ப­டு­கி­றது. அது­பற்றி முடிவு செய்­வ­தற்கு இன்­னமும் ஒன்­றரை ஆண்­டுகள் இருக்­கின்­றன என்று நான் நினைக்­கிறேன். அது முன்­னாள் ­ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ஷவைப் பொறுத்த விடயம். மிகச்சிறந்த வேட்­பாளர் யார் என்று அவரே முடிவு செய்வார். வெற்றி பெறக்கூடிய, பொருத்­த­மான வேட்­பாளர் யார் என்­பது அவ­ருக்குத் தெரியும்.

கேள்வி: தற்­போ­தைய சூழ்­நி­லையில்,  அந்த வகி­பாகம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: முன்னாள்  ஜனா­தி­பதி  மஹிந்த ராஜ­பக்­ஷவை விட, வேட்­பா­ள­ரா­வ­தற்கு பொருத்­த­மா­னவர் வேறு எவரும் இல்லை. மக்கள் ஆத­ர­வையும், பிர­ப­லத்­தையும்,  தற்போ­தைய சூழ்­நி­லையில் தேவைப்­படும் தலை­மைத்­து­வத்தை வழங்கக் கூடிய ஆற்­ற­லையும் அவர் கொண்டுள்ளார். மேலும் அவர் அனு­பவம் மிக்­கவர்.

19 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தச்­சட்­டத்­தினால், துர­திர்ஷ்­ட­வ­ச­மாக, அவர் ஜனாதிபதி வேட்­பா­ள­ராக போட்­டி­யிட முடி­யாது. அவ­ரது ஆத­ரவைப் பெற்ற எவ­ரேனும் ஒரு­வரால்தான் வெற்றிபெற முடியும்.

கேள்வி: உங்­களை வேட்­பா­ள­ராகத் தெரிவு செய்தால், அந்தச் சவாலை எதிர் கொள்வதற்கு, நீங்கள் தயாரா?

பதில்: அவர் அவ்­வாறு நினைத்தால், நான் போட்­டி­யி­டுவேன். அதற்­காக முன்வருவேன். போட்­டி­யி­டு­வ­தற்­கான ஆற்றல் எனக்கு இருப்­ப­தாக நான் நினைக்கிறேன்.

கேள்வி: அமெ­ரிக்க குடி­யு­ரி­மையைக் கொண்­டுள்­ளதால், இரட்டைக் குடி­யு­ரிமை உங்க­ளுக்குத் தடை­யாக இருக்­கி­றது. இதனை எப்­படி தீர்க்கப் போகி­றீர்­கள்?

பதில்: 19 ஆவது திருத்தச் சட்­டத்­தின்படி, இப்­போது என்னால் போட்­டி­யிட முடி­யாது. இருந்­தாலும், முன்னாள் ஜனா­தி­பதி  என்னை வேட்பாளராகத் தெரிவு செய்தால், இரட்டைக் குடியுரிமையை கைவிடும் செயல்முறைக்கு செல்ல வேண்டும்.

கேள்வி: அதற்கான செயல்முறைகள் என்ன?

பதில்:   அது என்னைப் பொறுத்த விடயம். அதற்கான செயல்முறை உள்ளது. அது தெளிவான- குறுகிய நடைமுறைதான்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்