ஞானசாரவை கைது செய்யுமாறு, நீதிமன்றம் உத்தரவு

🕔 March 15, 2018

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை கைது செய்யுமாறு, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற விசாரணையொன்றுக்கு சமூகமளிக்காத காரணத்தினால், அவருக்கு எதிராக இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

திட்டமிட்ட குற்றங்களை விசாரணை செய்யும் பிரிவினர், மேற்படி வழக்கினை ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்திருந்தனர்.

இதேவேளை, ஜப்பானில் ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்வொன்றில், நேற்று முன்தினம் ஞானசாரவும் கலந்து கொண்டதாக செய்திகளும், புகைப்படங்களும் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்