கலைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான தேர்தல்களை, ஏப்ரலில் நடத்த வேண்டும்: ‘கபே’ கோரிக்கை

🕔 February 21, 2018

மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடத்தப்பட வேண்டும் என்று கபே அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அந்த அமைப்பு இன்று புதன்கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே, இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கடந்த வருடம் கலைக்கப்பட்ட கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்கள், அரசாங்கம் வாக்களித்ததன் அடிப்படையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடத்தப்பட வேண்டும்

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் பின்னடைவு காரணமாக, மாகாணசபைத் தேர்தல்களை ஒத்திப்போடும் முயற்சியில் அரசாங்கம் ஆர்வம் கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களை நொண்டிச் சாட்டுக்களைக் கூறி, ஒத்திவைத்ததன் விளைவே அரசாங்கம் தேர்தலில் பின்னடைவை எதிர்கொண்டது.

மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய அறிக்கை தற்போது அமைச்சிடம் கையளிக்கப்பட்டு விட்டது.

எனவே, இனியும் தாமததிக்காமல் கலைக்கப்பட்ட மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தல்களையும் ஏப்ரல் மாதத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் ஆவண செய்ய வேண்டும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்