அமைச்சரவையில் இந்த வாரம் மாற்றம்; அமைச்சர் ராஜித தெரிவிப்பு

🕔 February 15, 2018

மைச்சரவையில் இந்த வாரத்தில்  மாற்றம் செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற போதே, அவர் இதனைக் கூறினார்.

எவ்வாறாயினும் அடுத்த இரண்டரை வருடங்களுக்கு தற்போதைய நல்லாட்சி தொடரும் என்றும் அவர் இதன் போது உறுதிபடத் தெரிவித்தார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்களே, அரசாங்கத்தை விமர்சித்து வருவதால், இது தொடர்பில் ஒரு இணக்கப்பாட்டுக்கு வர வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்