அம்பாறை மாவட்டத்தில் அமைதியான வாக்களிப்பு

🕔 February 10, 2018

-அஹமட் –

ம்பாறை மாவட்டத்தில் வாக்களிப்பு நடவடிக்கைகள் அமைதியாக இடம்பெற்று வருகின்றன.

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் வன்முறைகள் மற்றும் தேர்தல் சட்ட மீறல்கள் மிகவும் குறைந்தளவிலேயே இங்கு பதிவாகியுள்ளன.

ஆயினும் அநேகமான பகுதிகளில் வாக்களிப்பு மிகவும் மந்த கதியிலேயே இடம்பெற்று வருகின்றன.

பல இடங்களில் பொலிஸ் பாதுகப்புக்கு மேலதிகமாக, விசேட அதிரடிப்படை பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த தேர்தல்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறான வாக்களிப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்த போதிலும், இம்முறை அவ்வாறு பிரிக்கப்படவில்லை.

தேர்தல் ஆணைக்குழு, தேர்தல் சட்டங்களை இறுக்கமாக நடை முறைப்படுத்தி வருகின்றமை காரணமாகவே, அமைதியான வாக்களிப்பு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்